தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 5 பல்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- தேங்காய் - 2 ஸ்பூ
- கசகசா - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
- கிராம்பு - 3
- பட்டை - 1
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- புதினா - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 8பல்
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- மிளகு - 1/4 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து கொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய் தூள்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- மசாலா அரைக்க இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய், மிளகு,தனியா,தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
- பின் தேங்காய், கசகசா,1/2 ஸ்பூன் சோம்பு மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு,பட்டை, ஏலக்காய், சோம்பு,கருவேப்பிலை,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ,புதினா சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதன் பச்சைவாடை போகும் வரை கிளறவும்.
- பின் சிறிதாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறவும்.
- 10 நிமிடம் பிறகு அரைத்து வாய்த்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் உற்றி சிக்கன் வேகும் வரை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
- சிக்கனானது நன்கு வெந்ததும் சுவையான காரைக்குடி சிக்கன் மசாலா ரெடி