Pages

கடாய் காளான் கிரேவி

தேவையான பொருட்கள்: 

  1. காளான் - 1 கப் 
  2. குடைமிளகாய் - 1
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  7. கரம் மசாலா - 1/4ஸ்பூன் 
  8. பிரஷ் க்ரீம் - 3 ஸ்பூன் 
  9. கொத்தமல்லி - சிறிது 
  10. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  11. உப்பு - 3/4 ஸ்பூன்
 வறுத்து அரைப்பதற்கு:

  1. வரமிளகாய் - 3 
  2. மல்லி - 2 ஸ்பூன் 
  3. மிளகு-1/2 ஸ்பூன் 
  4. பட்டை-1
  5. கிராம்பு-2
  6. சோம்பு-1/4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 
  2. கடாய் சூடானதும் வருக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,ஆறவைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 
  3. பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், கொடமிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
  6. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும். 
  7. அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  8.  நன்கு கொதித்ததும் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  9. பின் கொத்தமல்லியைத் தூவினால் கடாய் காளான் கிரேவி ரெடி!!!

0 comments:

Post a Comment