தேவையான பொருட்கள் :
கோழி - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 3ஸ்பூன்
தனியா பொடி - 4ஸ்பூன்
அரைக்க தேவையானவை :
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 1
உப்பு - 11/2 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை :
நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
செய்முறை :
- ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
- கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
- வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.
0 comments:
Post a Comment