தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய்-250 கிராம்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- கரம்மசாலா-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- எண்ணெய் -5 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
- 1/2 இன்ச் அளவில் வெண்டைக்காய் வெட்டி கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய்,சிறிது உப்பு சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
- வெண்டைக்காய் வெந்ததும் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கரம்மசாலா,மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
- பின் அதில் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும், பிந்தி மசாலா ரெடி.
0 comments:
Post a Comment