தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- தயிர் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
- தனியா தூள்-1 ஸ்பூன்
- பச்சை மிள்காய் -1
- புதினா- சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
- முந்திரி - 6
- உப்பு - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிது
செய்முறை:
- சுத்தம் செய்த சிக்கனோடு,சிறிது உப்பு,மஞ்சள் தூள்,தயிர் கலந்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
- தக்காளி மசிந்ததும் மிளகாய்த்தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி மூடி விடவும்.மூடி போட்டு மிதமான நெருப்பில் 10 நிமிடம் வேக விடவும்.
- பின்பு 1 கப் தண்ணீர் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.சிக்கன் வெந்ததும் சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறவும்.சிக்கன் சால்னா ரெடி.
0 comments:
Post a Comment