தேவையான பொருட்கள்:
செய்முறை:
- சிக்கன் – 1/2 கிலோ
- இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
- காய்ந்த மிளகாய் – 5
- சோம்பு – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- சின்ன வெங்காயம் –10
- தக்காளி – 1
- கறிவேப்பிலை-சிறிது
- கடலை மாவு – 1/2 கப்
- தேங்காய்- 1/2 கப்
- எண்ணெய்- 5 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:
- மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும்.
- சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும்.
- கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
- மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி.
0 comments:
Post a Comment