தேவையான பொருட்கள்:
- முந்திரி - 1 கப்
- கடலை மாவு - 1/2 கப்
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- நெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!
0 comments:
Post a Comment