Pages

புளியோதரை

தேவையான பொருட்கள்:

  1. சாதம் - 2 கப்
  2. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  3. கருவேப்பில்லை- சிறிது
  4. உப்பு - 2 ஸ்பூன்
  5. புளி - 1 கப் கரைத்தது
  6. வேர்கடலை -1 ஸ்பூன்
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 4 ஸ்பூன்
வறுத்து அரைக்க :
  1. சீரகம் - 1/2 ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
  4. மிளகு - 1/2 ஸ்பூன்
  5. தனியா - 1/2 ஸ்பூன்
  6. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  7. க.மிளகாய் - 8

செய்முறை: 
  1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். ஆறியதும் பொடியாகி கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு கருவேப்பில்லை, க.மிளகாய், வேர்கடலை சேர்த்து பொரிந்ததும்அதில் கரைத்த புளி தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதித்ததும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

0 comments:

Post a Comment