தேவையான பொருட்கள்:
- சிக்கன்- 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- தேங்காய் பால் - 1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
வறுத்து அரைக்க
- மிளகாய் வற்றல் - 3
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
செய்முறை :
- வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
- கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
- சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
- சுவையான மலபார் சிக்கன் கறி தயார்.
0 comments:
Post a Comment