Pages

மலபார் எக் கறி

தேவையான பொருட்கள்:


    1. முட்டை - 3
    2. வெங்காயம் - 1
    3. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
    4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    5. மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    7. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    8. தேங்காய் பால் - 2 கப்
    9. எண்ணெய் - 3 ஸ்பூன்
    10. கடுகு-1/4 ஸ்பூன்
    11. சீரகம் - 1/4 ஸ்பூன்
    12. கறிவேப்பிலை-சிறிது
    13. உப்பு- 3/4 ஸ்பூன்
    செய்முறை:
    1. முட்டை வேகவைத்து பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
    2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,நீளவாக்கில் மெலிசாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    5. மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்பால் சேர்த்து கொதிவர ஆரம்பித்ததும் முட்டை போட்டு மசாலாவை இறக்கவும்.
    6. கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.  

    2 comments:

    Avargal Unmaigal said...

    முட்டை சாப்பிட வேண்டாம் என்று வைத்திருந்தேன் இப்போது நீங்கள் குறிப்பு போட்டு என் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஹூம்ம்ம்ம்ம்

    Priya said...

    Avargal Unmaigal thanks...

    Post a Comment