Pages

கடாய் பனீர் 2

தேவையான பொருட்கள்:
  1. பன்னீர் - 1 கப் 
  2. வெங்காயம்-1
  3. கொடமிளகாய் - 1
  4. இஞ்சி-சிறிது 
  5. பூண்டு- 2 பல் 
  6. மிளகு-1 ஸ்பூன் 
  7. தனியா - 1 ஸ்பூன் 
  8. மிளகாய்-3
  9. பட்டை-1
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய்-2
  12. சீரகம்-1/2 ஸ்பூன் 
  13. சோம்பு-1/2 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன் 
  15. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன் 
  16. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  17. எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.

0 comments:

Post a Comment