Pages

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள் :


  1. பெரிய மீன் -6 துண்டுகள்
  2. பாசுமதி அரிசி - 3 கப்
  3. வெங்காயம் -2
  4. தக்காளி -1
  5. பச்சைமிளகாய்-2
  6. கொத்தமல்லி - சிறிது
  7. புதினா - சிறிது
  8. இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
  9. மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
  10. தனியாதூள் -3 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  12. பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
  13. எண்ணெய் - 6 ஸ்பூன்
  14. பட்டை - 2

  15. கிராம்பு - 2
  16. ஏலக்காய் - 2
  17. பிரியாணி இலை - 2
  18. உப்பு - 3 ஸ்பூன்


செய்முறை :


  1. முதலில் ஒரு பாத்தரத்தில் மிளகாய் தூள் , தனியா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள்  தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்,உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் உறவிடவும்.
  2. பின்பு அதை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீன்களை வறுத்து எடுக்கவும்.
  3. பின் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் தக்காளி போட்டு வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. 10 நிமிடம் களித்து அதில் வருத்த மீன் துண்டுகளை போட்டு, மீன் உடையாமல் கிளறி விடவும்.
  7. பின் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு காற்று போகாத மூடி போட்டு மூடிவைக்கவும்.
  8. தம் முறையில் அரை மணி நேரம் பிறகு மீன் உடையாமல் கிளறவும்.

குறிப்பு :

தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.

0 comments:

Post a Comment