தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி - 2 கப்
- தேங்காய் பால் - 2 கப்
- தண்ணீர் - 1 1/2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- பிரிஞ்சி இலை - 2
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போட்டு பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
- இப்போது பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும்.
- சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.
0 comments:
Post a Comment