skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்:
- காளான் - 1 கப்
- குடைமிளகாய் - 1
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4ஸ்பூன்
- பிரஷ் க்ரீம் - 3 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு:
- வரமிளகாய் - 3
- மல்லி - 2 ஸ்பூன்
- மிளகு-1/2 ஸ்பூன்
- பட்டை-1
- கிராம்பு-2
- சோம்பு-1/4 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
- கடாய் சூடானதும் வருக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,ஆறவைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
- பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.
- அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- நன்கு கொதித்ததும் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- பின் கொத்தமல்லியைத் தூவினால் கடாய் காளான் கிரேவி ரெடி!!!
தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் -2 கப்
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் -2 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
- கடலைபருப்பு-1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- காரட்-1
- பீன்ஸ்-5
- பச்சைபட்டாணி-1/4 கப்
- உப்பு-1/2 ஸ்பூன்
- தண்ணீர்-1 1/4கப்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு சேர்த்து பொரிந்ததும், அதில் கருவேப்பிலை,நீளமாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் பொடியாக நறுக்கிய காரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் சிறிது மஞ்சள் தூள்,ஓட்ஸ் உப்பு சேர்த்து நன்கு கிளறி 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி, தீயை சிறிதில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
- வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறினால் ஓட்ஸ் உப்புமா ரெடி.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- தயிர் - 1 கப்
- சோள மாவு - 5 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
- மிளகு தூள் - 3/4 ஸ்பூன்
- முட்டை - 1
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- கேசரி கலர் - சிறிது
- எண்ணெய் - 2 கப்
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அத்துடன் தயிர்,சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,கேசரி கலர்,எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிக கொள்ள வேண்டும்.
- அந்த கலவையில் தண்ணீர் அதிகம் இருந்தால், குறைப்பதற்கு அத்துடன் சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- பின் 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் காரமான சிக்கன் ப்ரை ரெடி!!!
தேவையான பொருட்கள்:
- சிக்கன் -1/4 கிலோ
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- பட்டர் - 2 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- தக்காளி - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- சீரக தூள் - 1 ஸ்பூன்
- மிளகு தூள் -1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
- பூண்டு - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி -சிறிது
- உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
- பேனில் எண்ணெயும்,பட்டரும் சேர்த்து சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
- அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தனியா தூள், சீரக தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை இதில் சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகள், மீதமுள்ள கலந்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- ஐந்து நிமிடத்திற்கு பிறகு கசூரி மேத்தியை சேர்க்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கிளறவும். மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்.
- சிக்கன் வெந்ததும் நன்கு வறுத்து எடுக்கவும். பின் அதில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- தயிர் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
- தனியா தூள்-1 ஸ்பூன்
- பச்சை மிள்காய் -1
- புதினா- சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
- முந்திரி - 6
- உப்பு - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிது
செய்முறை:
- சுத்தம் செய்த சிக்கனோடு,சிறிது உப்பு,மஞ்சள் தூள்,தயிர் கலந்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
- தக்காளி மசிந்ததும் மிளகாய்த்தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி மூடி விடவும்.மூடி போட்டு மிதமான நெருப்பில் 10 நிமிடம் வேக விடவும்.
- பின்பு 1 கப் தண்ணீர் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.சிக்கன் வெந்ததும் சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறவும்.சிக்கன் சால்னா ரெடி.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 5 பல்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- தேங்காய் - 2 ஸ்பூ
- கசகசா - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
- கிராம்பு - 3
- பட்டை - 1
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- புதினா - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
மசாலா அரைக்க:
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 8பல்
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- மிளகு - 1/4 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து கொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய் தூள்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- மசாலா அரைக்க இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய், மிளகு,தனியா,தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
- பின் தேங்காய், கசகசா,1/2 ஸ்பூன் சோம்பு மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு,பட்டை, ஏலக்காய், சோம்பு,கருவேப்பிலை,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ,புதினா சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதன் பச்சைவாடை போகும் வரை கிளறவும்.
- பின் சிறிதாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறவும்.
- 10 நிமிடம் பிறகு அரைத்து வாய்த்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் உற்றி சிக்கன் வேகும் வரை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
- சிக்கனானது நன்கு வெந்ததும் சுவையான காரைக்குடி சிக்கன் மசாலா ரெடி
தேவையான பொருட்கள்:
- பன்னீர் - 1 கப்
- வெங்காயம்-1
- கொடமிளகாய் - 1
- இஞ்சி-சிறிது
- பூண்டு- 2 பல்
- மிளகு-1 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- மிளகாய்-3
- பட்டை-1
- கிராம்பு-3
- ஏலக்காய்-2
- சீரகம்-1/2 ஸ்பூன்
- சோம்பு-1/2 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
- பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
- மீல் மேக்கர் - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
- தனியா தூள் - 1/2 ஸ்பூன்
- சீரக தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- தேங்காய் பால் - 1/2 கப்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
- முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தேவையான பொருட்கள்:
- காரட் -5
- பாஸ்மதி அரிசி-1 கப்
- பட்டை-1
- கிராம்பு-3
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்-3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- வெங்காயம் -1
- உப்பு-1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- பாஸ்மதி அரிசியை நன்கு ஒட்டாத படி சாதமாக வடித்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கவும் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதில் உப்பு , கரம் மசாலா, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ளவும்)
- பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் காரட் சாதம் ரெடி.
தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- தக்காளி - 2
- வெங்காயம் - 1
- கடலைபருப்பு - 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 3 பல்
- காய்ந்த மிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வருக்க வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
- நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
- பின் கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும்.சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.
தேவையான பொருட்கள் :
- பிரொக்கோலி -1 கப்
- உப்பு - சிறிது
- மிளகு தூள்-1/4 ஸ்பூன்
- பூண்டு-2 பல்
- ஒலிவ்(Olive)எண்ணெய் -1 ஸ்பூன்
செய்முறை :
- பிரொக்கோலி சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- பின் அதில் உப்பு, மிளகு தூள்,எண்ணெய் , பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் அதை ஓவனில்(oven) 10 நிமிடம் வைத்து bake செய்து எடுத்தால் கிரிஸ்பி பிரொக்கோலி தயார்.
தேவையான பொருட்கள்:
- பேபி உருளைக்கிழங்கு - 8
- பச்சை மிளகாய் - 2
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லி தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- உப்பு -1 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பேபி உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்
- பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- பின் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமானதும், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
- பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.