தேவையான பொருட்கள் :
- மட்டன் - அரை கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
- மிளகாய் பொடி - 2ஸ்பூன்
- தனியா பொடி - 3ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 1
- சோம்பு - 1/2ஸ்பூன்
- வெந்தயம் - 1/2ஸ்பூன்
- கருவேப்பில்லை- சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
அரைக்க தேவையானவை :
- மிளகு - 1ஸ்பூன்
- சீரகம் - 1ஸ்பூன்
- சோம்பு - 1ஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு குக்கரில் மட்டன் சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.
- ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, வெந்தயம், கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
- சிறிது வதக்கி பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மட்டன் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.
0 comments:
Post a Comment