Pages

கடாய் பனீர் 2

தேவையான பொருட்கள்:
  1. பன்னீர் - 1 கப் 
  2. வெங்காயம்-1
  3. கொடமிளகாய் - 1
  4. இஞ்சி-சிறிது 
  5. பூண்டு- 2 பல் 
  6. மிளகு-1 ஸ்பூன் 
  7. தனியா - 1 ஸ்பூன் 
  8. மிளகாய்-3
  9. பட்டை-1
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய்-2
  12. சீரகம்-1/2 ஸ்பூன் 
  13. சோம்பு-1/2 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன் 
  15. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன் 
  16. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  17. எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மீல் மேக்கர் குருமா

தேவையான பொருட்கள் :
  1. மீல் மேக்கர் - 1 கப் 
  2. வெங்காயம் - 1 
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் 
  8. தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
  9. சீரக தூள்  - 1/2 ஸ்பூன் 
  10. கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
  11. தேங்காய் பால் - 1/2 கப் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்  
  13. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  14. கொத்தமல்லி - சிறிது 
செய்முறை: 

  1. முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
  5. பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.


காரட் சாதம்

தேவையான பொருட்கள்:


  1. காரட் -5
  2. பாஸ்மதி அரிசி-1 கப் 
  3. பட்டை-1
  4. கிராம்பு-3
  5. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  8. வெங்காயம் -1
  9. உப்பு-1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. பாஸ்மதி அரிசியை நன்கு ஒட்டாத படி சாதமாக வடித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கவும் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் உப்பு , கரம் மசாலா, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ளவும்)
  5. பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் காரட் சாதம் ரெடி.

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:


  1. துருவிய தேங்காய் - 1/2 கப் 
  2. தக்காளி - 2
  3. வெங்காயம் - 1
  4. கடலைபருப்பு - 2 ஸ்பூன் 
  5. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
  6. கடுகு - 1 ஸ்பூன் 
  7. இஞ்சி - 1 துண்டு 
  8. பூண்டு - 3 பல் 
  9. காய்ந்த மிளகாய் - 3
  10. கறிவேப்பிலை - சிறிது 
  11. எண்ணெய் - 3 ஸ்பூன் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்

செய்முறை: 

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வருக்க  வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும் 
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
  4. நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். 
  5. பின் கடாயில்  2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும்.சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.


கிரிஸ்பி பிரொக்கோலி

தேவையான பொருட்கள் :

  1. பிரொக்கோலி -1 கப் 
  2. உப்பு - சிறிது 
  3. மிளகு தூள்-1/4 ஸ்பூன் 
  4. பூண்டு-2 பல் 
  5. ஒலிவ்(Olive)எண்ணெய் -1 ஸ்பூன் 
செய்முறை :

  1. பிரொக்கோலி சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. பின் அதில் உப்பு, மிளகு தூள்,எண்ணெய் , பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின் அதை ஓவனில்(oven) 10 நிமிடம் வைத்து bake செய்து எடுத்தால் கிரிஸ்பி பிரொக்கோலி தயார்.

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்: 

  1. பேபி உருளைக்கிழங்கு - 8
  2. பச்சை மிளகாய் - 2 
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. மல்லி தூள் - 1 ஸ்பூன் 
  8. கரம் மசாலா - 1 1/4 ஸ்பூன்  
  9. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  10. உப்பு -1 ஸ்பூன்  
  11. எண்ணெய் - 4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் பேபி உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்  
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  3. பின் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  4. உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமானதும், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
  5. பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். 
  6. பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளற வேண்டும். 
  7. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

சில்லி இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:
  1. இறால் - அரை கிலோ
  2. பூண்டு - 6 பல்
  3. பச்சை மிளகாய் - 2
  4. மிளகு தூள் - 2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 1
  6. கறிவேப்பிலை - சிறிது
  7. மஞ்சள்தூள் - சிறிது 
  8. எண்ணெய் - 4
  9. உப்பு -1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும். சில்லி இறால் வறுவல் ரெடி.

அவகாடோ பிரட் சான்ட்விச்

தேவையான பொருட்கள்:
  1. அவகாடோ - 1
  2. வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -1
  5. கொத்தமல்லி - சிறிது 
  6. லெமன்  சாறு - 1 ஸ்பூன் 
  7. உப்பு - 1/2 ஸ்பூன் 
  8. பிரட்- 4
  9. பட்டர்- சிறிது 
செய்முறை:

  1. அவகாடோவை ஓடு பாத்திரத்தில்  போட்டு நன்கு மசித்து கொள்ளவும் 
  2. பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் ,கொத்தமல்லி சேர்த்து கிளறவும். 
  3. பின் அதில் லெமன் சாறு,உப்பு சேர்த்து நன்கு கிளறி இரண்டு பிரட் துண்டுகளின் நடுவில் வைத்து, சூடான தவில் சிறிது பட்டர் தடவி இருபுறமும் திருப்பி போட்டால்  அவகாடோ பிரட் சான்ட்விச் ரெடி (சீஸ் 1 துண்டு வைத்தும் டோஸ்ட் செய்யலாம் )
குறிப்பு :

டோஸ்ட்டர் ஓவன் இருந்தால் அதில் டோஸ்ட்ல் வைத்து இருபக்கமும் திருப்பி டோஸ்ட் செய்து எடுக்கலாம் 

பொன்னாங்கனி கீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
  1. பொன்னாங்கனி கீரை - 1 கட்டு
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி-1
  4. பூண்டு - 8 பல் 
  5. சிறுபருப்பு - 1 கப்
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
  8. பெருங்காயம் - சிறிது 
  9. எண்ணெய் - 2 ஸ்பூன் 
  10. கடுகு - 1/4 ஸ்பூன் 
  11. உளுத்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
  12. சீரகம் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
  1. சிறுபருப்பை கூகேரில் வைத்து ஒரு விசில் விடவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு , சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் பூண்டை தட்டி போட்டு தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்திக்கவிடவும். 
  5. 5 நிமிடம் பின் வேகவைத்த சிறுபருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பொன்னாங்கனி கீரை கூட்டு ரெடி.

பேக்ட் சிக்கன்

தேவையான பொருட்கள்
  1. சிக்கன் லெக் பீஸ் - 4
  2. தயிர் - அரை கப்
  3. மிளகாய் தூள் - 1ஸ்பூன் 
  4. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. சாட் மசாலா - 1/4 ஸ்பூன
  8. ஃபுட் கலர் - சிறிது
  9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  10. எண்ணெய் -2 ஸ்பூன்
  11. லெமன் - 1
செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா ,மிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
  2. சிக்கனை மசாலாவில் 2 மணி நேரம் ஊறவிடவும்.
  3. 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். நன்கு வெந்ததும் 2 நிமிடத்திற்கு அவனில் பராயில் வைத்து கிரிஸ்பியாக்கவும்.
  4. பின் சிக்கன் மேல் லெமன் சாரை பிழிந்து பரிமாறவும்.

காளான் மஞ்சூரியன்


 தேவையான பொருட்கள் :
  1. காளான் - 10
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
  3. சோள மாவு - 4 ஸ்பூன் 
  4. மைதா - 2 ஸ்பூன் 
  5. சோயா சாஸ் - 2'ஸ்பூன்
  6. உப்பு - 1ஸ்பூன் 
  7. எண்ணெய் - 2 கப்
  8. வெங்காயம் - 1
  9. சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 
  10. தக்காளி கெட்சப் - 1 1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு பௌலில் சோள மாவு, மைதா,  1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். 
  3. ஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும். 
  4. பிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி.

கத்திரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய் - 2
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. கடுகு - சிறிது 
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  8. மல்லித் தூள் - 1/4 ஸ்பூன் 
  9. உப்பு - 1/2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி - சிறிது 
  11. எண்ணெய் - 2 ஸ்பூன் 
செய்முறை :
  1. கூகேரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. பின் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனிய தூள்,உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
  4. கூக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
  5. கத்திரிக்காய் சட்னி ரெடி .கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி,தோசையுடன் நன்றாக இருக்கும்.


வெஜிடேபிள் சமோசா


தேவையான பொருட்கள்:
  1. உருளைக்கிழங்கு - 2
  2. பச்சை பட்டாணி - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  4. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. சீரகம்- 1/4 ஸ்பூன்
  7. உப்பு - 3/4 ஸ்பூன் 
  8. மைதா - 2 கப் 
  9. எண்ணெய் - 3 கப்
  10. தண்ணீர் - 2 கப் 
செய்முறை: 
  1. ஒரு பெரிய பௌலில் மைதா, 1/4 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 
  2. பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிட வேண்டும். 
  3. பின்னர் ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி போட்டு, நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். 
  4. பின்பு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் நீளமாக வேட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.
  6. ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி ,அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  7. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சமோசாக்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  8. சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.




தக்காளி சூப்

                                             
தேவையான பொருட்கள்:
  1. தக்காளி - 3
  2. காரட் -1
  3. பீட்ரூட் - 1 சிறிய துண்டு 
  4. பூண்டு - 3 பல்
  5. இஞ்சி - சிறியது
  6. கொத்தமல்லி காம்பு - 4 துண்டு 
  7. பட்டை - 1
  8. கிராம்பு - 2
  9. பிரியாணி இலை - 1
  10. கார்ன் மாவு - 1 ஸ்பூன் 
  11. உப்பு - 3/4 ஸ்பூன் 
  12. மிளகு - 10
  13. பட்டர் - 1/2 ஸ்பூன்
  14. தண்ணீர் - 2 கப்ஸ் 
  15. பிரட் - 2
செய்முறை:
  1. பிரஷர் கூகேரில் தக்காளி,நறுக்கிய காரட், பீட்ரூட்,பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, கொத்தமல்லி காம்பு, இஞ்சி,பூண்டு, தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
  2. பின் தக்காளியின் தோலை எடுத்துவிடவும்.
  3. பட்டை,கிராம்பு,பிரியாணி இலையை நீக்கிவிட்டு,மீதமுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சாருடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. 2 நிமிடம் கொதித்ததும் கார்ன் மாவை தண்ணீரில் கட்டிபடாமல் கரைத்து சூப்புடன் சேர்க்கவும்.
  6. சிறு தீயில் வைத்து 4 நிமிடம் கொதிக்க விட்டு உப்பு,பட்டர் சேர்த்து கிளறி பிரட் துண்டுகளை பொரித்து மேலே போட்டு பரிமாறவும்.

முந்தரி பகோடா

தேவையான பொருட்கள்:
  1. முந்திரி - 1 கப் 
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  5. நெய் - 2 டீஸ்பூன் 
  6. உப்பு - 1/2 ஸ்பூன் 
  7. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
  1. முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!