தேவையான பொருட்கள் :
- மீன் - 300 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - 2ஸ்பூன்
- வெங்காயம் - 1
- மிளகாய் - 5
- பூண்டு - 2 பல்
- தேங்காய் துருவல் - 2ஸ்பூன்
- முந்திரிபருப்பு - 6
- எண்ணெய் - 4ஸ்பூன்
- சீரகம் - 1/4ஸ்பூன்
- சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
- தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
- பெருஞ்சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
- தயிர் - 1/4 கப்
- தண்ணீர் - 1 கப்
- கொத்தமல்லி இலை- சிறிது
செய்முறை :
- மீனை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
- மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
- அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.
- ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
- 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
- சுவையான க்ரீன் ஃபிஷ் கறி ரெடி.இதனை சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.
0 comments:
Post a Comment