தேவையான பொருட்கள்:
- வெங்காயம்-1
- தக்காளி-1
- பூண்டு-3 பல்
- கடுகு-1/4 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- எண்ணெய்-4 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- வதங்கியதும் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்ததும் சப்பாத்தி,தோசையுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment