எண்ணெய்-4 ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
வெங்காயம் - 1
பூண்டு-4
கடுகு- 1/4 ஸ்பூன்
வெந்தயம்-1/4ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
புளி கரைசல் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
அரைக்க தேவையானவை :
வெங்காயம் - 1
தக்காளி-1
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளி நன்றாக மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாய் வைத்து அதில் 4 எண்ணெய் ஸ்பூன் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போடவும்.
- பொரிந்ததும் சிறியதாக வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் அரைத்து வைத்ததை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்த மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
- மீன் வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment