- பனீர்- 100 கிராம்
- பட்டாணி - 1/2 கப்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- பச்சைமிளகாய்-2
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- பட்டை-2
- கிராம்பு - 2
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய்- 5 ஸ்பூன்
அரைக்க :
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- முந்தரிபருப்பு-6
செய்முறை :
- Nonstick கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதாக வெட்டி வைத்த பனீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- பின் அதே எண்ணையில் பட்டை,கிராம்பு போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம்,லேசாக கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
- பின் அதில் பட்டாணி சேர்த்து வதக்கி, தண்ணீர் 1 கப் ஊற்றி பட்டாணியை வேகவிடவும்.
- பட்டாணி பாதி வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய்,முந்தரி பேஸ்ட் கலவையை அதில் போட்டு கிளறவும்.
- 5 நிமிடம் கொதித்ததும் பனீர் துண்டுகளை அதில் சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
- சிறிதாக வெட்டி வைத்த கொத்தமல்லி இலையை தூவி சப்பாத்தி, naan உடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment