தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 3
- பாசி பருப்பு - 1/2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி -1
- பூண்டு - 3 பல்
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2ஸ்பூன்
- தனியா தூள் - 1/2ஸ்பூன்
- உப்பு - 3/4ஸ்பூன்
- கடுகு- 1/4ஸ்பூன்
- சீரகம் - 1/4ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- Pressure கூகேரில் பாசிப்பருப்பு,மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், லேசாக கீறிய பச்சை மிளகாய், தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- கத்திரிக்காய் வதங்கியதும் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
- பின் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த பாசிபருப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- கத்திரிக்காய் கொத்சு ரெடி, வெண்பொங்கல் உடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment