தேவையான பொருட்கள் :
- பனீர் - 1 கப்
- கொடமிளகாய் - 1
- வெங்காயம் - 1
- தக்காளி-1
- இஞ்சி - சிறிது
- பூண்டு-4 பல்
- பட்டை-2
- கிராம்பு-2
- பிரியாணி இலை -2
- கரம்மசாலா-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- நெய் -2 ஸ்பூன்
- கேசரி கலர் - சிறிது
செய்முறை:
- முதலில் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு பொரித்து கொள்ளவும்.
- அதே பாத்திரத்தில் எண்ணெய்,நெய் சேர்த்து சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பொடியாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும்.
- அதில் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- பின் அதில் கொடமிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாதூள்,கரம்மசாலா,உப்பு,கேசரி கலர் சேர்த்து வதக்கவும்.
- பனீர் துண்டுகள்,1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி naan ,பரோட்டா உடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment