Pages

கடாய் பனீர்

 தேவையான பொருட்கள் :
  1. பனீர் - 1 கப்
  2. கொடமிளகாய் - 1
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி-1
  5. இஞ்சி - சிறிது
  6. பூண்டு-4 பல்
  7. பட்டை-2
  8. கிராம்பு-2
  9. பிரியாணி இலை -2
  10. கரம்மசாலா-1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  12. தனியாதூள்-1/2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன்
  15. கொத்தமல்லி-சிறிது
  16. எண்ணெய் -3 ஸ்பூன்
  17. நெய் -2 ஸ்பூன்
  18. கேசரி கலர் - சிறிது

செய்முறை:

  1. முதலில் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு பொரித்து கொள்ளவும்.
  2. அதே பாத்திரத்தில் எண்ணெய்,நெய் சேர்த்து சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பொடியாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும்.
  4. அதில் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
  5. பின் அதில் கொடமிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாதூள்,கரம்மசாலா,உப்பு,கேசரி கலர் சேர்த்து வதக்கவும்.
  6. பனீர் துண்டுகள்,1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி naan ,பரோட்டா உடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment