தேவையான பொருட்கள் :
- மீன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி- சிறிது
- உப்பு- 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- இஞ்சிபூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- தண்ணீர் 1 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு சேர்த்து வேகவிடவும்.
- நன்றாக மீன் வெந்து,மசாலா தொக்கு போலானதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.
குறிப்பு :
மீனை திருப்பும் போது மீன் துண்டுகள் உடையாமல் பொருமையாக திருப்பவும்.
0 comments:
Post a Comment