தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 2
- பீன்ஸ் - 6
- காரட் - 1
- பச்சைபட்டாணி - 1/4 கப்
- கொத்தமல்லி-சிறிது
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- சீரகம் -1/4 ஸ்பூன்
- கரம்மசாலா - 1/2 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் -3/4 ஸ்பூன்
- தனியாதூள்- 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- சிறிது
- முந்தரிபருப்பு - 5
- லெமன் - 1
- மைதா- 2 ஸ்பூன்
- பிரட் தூள்- 1 கப்
- எண்ணெய்- 15 ஸ்பூன்
செய்முறை:
- உருளைகிழங்கை வேகவைத்து,தோல் உறித்து மசித்து வைத்துகொள்ளவும்.
- மற்ற காய்களை பொடியாக நறுக்கி வேகவைத்து கொள்ளவும்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய முந்தரிபருப்பு சேர்த்து வதக்கவும்.
- பொன்னிறமாக மாறியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- வதங்கியதும் வேகவைத்த காய்களை சேர்த்து வதக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி உருளைக்கிழங்கு, லெமன்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும்.
- ஒரு கப்பில் மைதாமாவை 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவைக்கவும்.
- பிசைந்துவைத்த மசாலாவை சிறு உருண்டைகளாக எடுத்து கட்லெட் வடிவில் செய்து அதை மைதா கலவையில் லேசாக டிப் செய்து உடனே பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
- Nonstick கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட் துண்டுகளை அதில் போட்டு தோசை போல இரண்டு பக்கம் சிவக்க எடுக்கவும்.
- yummy கட்லட் ரெடி ketchup உடன் பரிமாறவும்.
குறிப்பு :
கட்லெட் கலவை செய்யும் பொது மசாலாவில் தண்ணீர் பதம் இல்லாமல் பார்த்துகொள்ளவும். அப்படி தண்ணீர் பதம் இருந்தால் சிறிது பிரட் தூளை சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா கலவையில் டிப் செய்வது பிரட் தூள்கள் நன்றாக ஓட்டுவதற்கு.கடைகளில் கட்லெட் cutter வாங்கி உங்களுக்கு பிடித்த வடிவில் செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment