தேவையான பொருட்கள் :
- துவரம் பருப்பு - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி -2 சிறியது
- பச்சை மிளகாய் -5
- பூண்டு -5
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சாம்பார் பொடி- 1 ஸ்பூன்
- உப்பு -1 1/2 ஸ்பூன்
- பெருங்காய தூள் - சிறிது
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- புளி கரைசல் - 1/4 கப்
- கருவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- க.மிளகாய் - 2
செய்முறை :
- முதலில்குக்கரில் பருப்பு, 1 தக்காளி , பூண்டு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காய தூள், 3 கப் தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 6 whistle விட்டு வேக விடவும் .
- பின்பு ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் க.மிளகாய் ,கருவேப்பில்லை,வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்பொடி, சாம்பார்பொடி,புளிகரைசல் சேர்த்து வதக்கி வெந்த பருப்பை போடவும்.
- உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லிதூவி இறக்கவும்.சுவையான இட்லி சாம்பார் ரெடி.
0 comments:
Post a Comment