தேவையான பொருட்கள் :
- உருளைகிழங்கு - 2
- அப்பளம் - 8
- கடலைபருப்பு - 1 / 2 கப்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 3 பல்
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- ஒரு pressure cooker ரில் கடலை பருப்பு, உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும்.
- கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து கிளறவும். பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் , வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும். காரக்குழம்பு சாதத்துடன் அருமையாக இருக்கும்.
குறிப்பு:
அப்பளத்தை எண்ணெயில் பொரிக்காமல், Microwave வில் 5 அப்பளம் வைத்து 1 நிமிடம் வைத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment